சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் COP 27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றபோது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கானாவின் நிதி அமைச்சர் கென் ஒஃபோரியாட்டா மற்றும் மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் ஆகியோரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...