சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்வது இடைநிறுத்தம்!

Date:

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்கள், தொழில் கிடைக்காமல் துன்புறுத்தலுக்கு ஆளானமை, சிறைத்தண்டனை அனுபவித்தமை மற்றும் காணாமல் போனமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வெளியான தகவல்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி, துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு சுற்றுலா விசா மூலம் பெண்களை பணியமர்த்துவதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் மூலம் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களை பதிவு செய்வதற்கான அனுமதியும் விசேட அறிவுறுத்தலின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...