ஞானசார தேரரிடம் வாக்குமூலம்!

Date:

திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார் 3 மணிநேரம்  வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திரைப்படக் கலைஞர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்களிடம் வாக்குமூலம பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி சந்தேகநபர் 2,510 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரியமாலியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...