நடை பயணத்திற்கு இடையூறு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Date:

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 12 ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவித்தமை,  இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில், சட்டவாட்சியை பாதுகாக்கும் வகையிலும் அமைதியை பேணும் நோக்கிலும் பொலிஸாரின் ஒழுக்கத்தை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நடை பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கான காரணம், யாருடைய உத்தரவின் பேரில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது, யாரால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது பொலிஸாரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல்களின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சத்தியக் கடதாசி மூலம் தகவல்களை சமர்ப்பிக்குமாறும் குறித்த கடிதத்தில் பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...