பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகள் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது!

Date:

(File Photo)

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களை துன்புறுத்தியதாக பல வழக்குகள் பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றை துன்புறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பில் கிரிபத்கொட மற்றும் களனி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மற்றுமொரு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...