‘பாடசாலை மாணவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்’

Date:

பாடசாலை மாணவர்களுக்கு வழமையை விட அதிகமாக உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு பிரிவினருக்கு மதிய உணவு வழங்கப்படுவதாகவும், நிதியத்தை நிறுவி அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முழு நாட்டிலும் பாடசாலை மாணவர்கள் உணவுப் பிரச்சினையை எதிர்கொள்வதால் அவர்களுக்கு மதிய உணவை தாமதமின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் அரசாங்க செலவினத்தை அதிகரித்துள்ளதால்இ இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பணத்தை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...