பாதுகாப்புக் கருதி ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

Date:

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை நிலைகொள்ளச் செய்வது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...