புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ‘விஷேட ஒன்று கூடல்’!

Date:

புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ‘விஷேட ஒன்று கூடல்’ நிகழ்வொன்று (26) புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கருத்திட்ட அதிகாரி ஆர்.சுகுனா மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதமோதரன் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு தரப்பினர், கல்வியலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பல்வேறு அமைப்புக்களை சார்ந்த சமூகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் காலை போஷாக்கின்மையினை போக்குவதற்கு விழுது மேம்பாட்டு மையம் முன்வரவேண்டும் என இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரசாங்க அதிகாரிகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வுகளை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...