பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Date:

இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமான பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் புதிய முஸ்லிம் ஆண் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து தசாப்த காலமாக  கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் நடைபெறும்.

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

  • க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம். கணிதம். தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப்
  • (C)பெற்றிருத்தல் 2005.01.31ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்
  • தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

1. நேர்முகப் பரீட்சை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும்
2.எழுத்துப் பரீட்சை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும்
3.நேர்முகப் பரீட்சை இடம்பெறும் தினத்தில் விண்ணப்பப் படிவங்கள் வாயிற் காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு…

 

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...