போராட்டத்திற்கு செல்ல வேண்டாம்: ஹிருணிகாவுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Date:

(file photo)

இன்று நடைபெறவுள்ள பாரிய போராட்டத்திற்கு பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதன்படி, மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வரும் இந்த பேரணி காரணமாக ஏனைய பிரஜைகள் சுதந்திரமாக பயணிக்கும் உரிமை தடைப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  கே.ஈ.என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டைப் பிரதேசத்தில் அதிகளவான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளதால், அவற்றில் பணிபுரிபவர்களும், சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தினந்தோறும் வருவோரும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இடையூறு ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோட்டை பகுதியிலுள்ள கடைகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாகவும், எனவே இந்தப் போராட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...