மலேசியா வழங்கிய மருந்துகளை இலவசமாக எடுத்துவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Date:

மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு அவசரமாகத் தேவையாகவுள்ள மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு

நாட்டிற்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் உதவி கோரி இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை நாடியது.

அதற்கமைய, மலேசிய சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் (31) நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமால்தீன், 63,100 அமெரிக்க டொலர் (2 கோடியே 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா) பெறுமதியான மருந்து பொருட்களை மலேசியாவிலுள்ள ஓய்வுபெற்ற இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல், சுமங்கலா டயஸிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் இந்த நன்கொடையை விமானம் மூலம் இலவசமாக கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கோலாலம்பூரிலிருந்து கொழும்புக்கு யூஎல் 319 என்ற விமானத்தில் இந்த மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...

ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில்...

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...