ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்தடை!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ தொழில்நுட்பம் மூலம் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...