ரிஷாட் பதியுதீன் பிரித்தானிய தூதுவருடன் சந்திப்பு!

Date:

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பான நேற்று(8) கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை, விவசாயம், மீன்பிடித் துறைக்கான முதலீடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இக்கட்டான பொருளாதார நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியமைக்காக உயர்ஸ்தானிகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...