இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “மெண்டஸ்” புயல் நேற்று (09) இரவு 08.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வட-வடகிழக்கே 280km தொலைவில் 12.2N அகலாங்கு மற்றும் 80.6E நெடுங்கோட்டுக்கு அருகில் நிலைகொண்டது.

வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலையில் கடக்க வாய்ப்புள்ளது. இதன்படி தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் வானிலையில் “மெண்டஸ்” புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மஹர சிறைக் கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற கலவரத்தால் ரூ.150 மில்லியனுக்கும்...

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...