‘இலங்கை வரும் பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனைகள் இல்லை’

Date:

வெளிநாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நடைமுறையில் இருந்த COVID 19 தொற்று நோய்களின் கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் எந்தவொரு நபரும் COVID 19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், எந்தவொரு விமான நிலையம் அல்லது  துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு நபரும்  பிசிஆர், ஆன்டிஜென் பரிசோதனைகளை  மேற்கொள்ள அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் கூறினார்.

வெளிநாட்டினர் அல்லது சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தரையிறங்கிய பின்னர்  கொவிட் தொற்று இருந்தால், அவர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்துதலுக்கான செலவை வெளிநாட்டினர் ஏற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...