உனவடுன ரயில் விபத்தில் தாயை இழந்த 4 வயது ரஷ்யக் குழந்தை தனிமையில்!

Date:

நேற்றையதினம் காலி, உனவடுனவில் ‘ரஜரட்ட ரஜின’ அதிவேக ரயிலில் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.

முச்சக்கரவண்டி சாரதியின் அஜாக்கிரதையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது இளம் மகளும் உனவட்டுன பகுதியில் தங்கியிருந்ததாகவும், நான்கு வயதுடைய தனது மகளை பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் இந்த கோர விபத்தை சந்தித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு இலங்கையில் உறவினர்கள் யாரும் இல்லாததால், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூலம் உறவினரை தொடர்பு கொள்ளும் வரை குழந்தை பகல்நேர பராமரிப்பு மையத்தில் இருக்கும்.

நேற்று காலை உனவட்டுன பிரதேசத்தில் பெலியஅத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதத்தின் முச்சக்கர வண்டி மோதியதில் ரஷ்ய பெண்ணும் அதன் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புகையிரத கடவையின் எச்சரிக்கை சமிக்ஞை அமைப்பு செயலிழந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டியை முன்னோக்கி செலுத்த வேண்டாம் என சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கூறிய போதும் சாரதி அதனை புறக்கணித்து புகையிரத பாதையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...