உலகளாவிய அறிவு சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம்!

Date:

உலகளாவிய அறிவு சுட்டெண் 2022 இல் 132 நாடுகளில் இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய அறிவுக் குறியீடு என்பது கல்வி, புத்தாக்கம், அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அடிப்படையில் கணிக்கப்படும்.

அதற்கமைய முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து   இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுட்டெண்ணில் 79ஆவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைக்கு 43.4 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 68.37 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து 68.28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் 66.96 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டில் இந்தியா 91வது இடத்தில் உள்ளது மற்றும் இந்தியா 41.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...