உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (29) கொழும்பில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், நேர்காணல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஏழு நாட்கள் நேர்காணல் இடம்பெற்றதுடன் இம்முறை மிகவும் பொருத்தமான குழுவிற்கு வேட்புமனு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.