காற்று மாசு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது: முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

Date:

கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளி மாசடைவதால் அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் போது முகக்கவசத்தை அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காற்று மாசுபாட்டின் அளவு அதற்கு நிகரான அளவை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

நிலவும் காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக சுவாசக் கோளாறுகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலநிலை இன்று (டிசம்பர் 8) மாத்திரமே நீடிக்கும் எனவும் மாலைக்குள் அது நிறைவடையும் எனவும் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

“குறிப்பாக முகமூடிகளை அணிவது முக்கியம். நீங்கள் வீட்டிற்குள் இருக்க முடிந்தால், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். வீட்டில் காற்று புழங்க விடுவது நல்லது. வெளியில் வேலை செய்யும் போது கடின உழைப்பைக் குறைக்கவும்.”

 

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...