காலநிலை தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை!

Date:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவுப்பகுதியை கடந்து செல்வதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் கனமழை மற்றும் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.

75 மிமீக்கு மேல் ஏற்படும். நாடளாவிய ரீதியில் மணிக்கு 40.50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் மறு அறிவித்தல் வரை அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...