சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட புதிய அங்கி : அரபு நாடுகளில் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அணிவிக்கப்படும்!

Date:

கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கியமை புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது .

மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.

அரபு நாடுகளில் மிக முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே இந்த அங்கி மரியாதை வழங்கப்படும். இருந்தாலும் தங்கள் அணியின் ஜெர்சியே ஒரு வீரருக்கு உயிர் போன்றதாகும்.

தங்கள் அணியை தங்கள் நாட்டை அடையாளப்படுத்தும் ஜெர்சியை மறைக்கும் விதமாக அதன் மேல் இந்த சிறப்பு அங்கியை அணிவித்ததை ஏற்க முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கினர்.

மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட இந்த அங்கி புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மெஸ்ஸியை  கௌரவிக்கும் விதமாகவே இந்த அங்கி அவருக்கு அணிவிக்கப்பட்டது.

அதேவேளை, மெஸ்ஸி கோப்பையை பரிசாக பெற்ற பின்னரும் தனக்கு வழங்கப்பட்ட அந்த கௌரவத்தை மதிக்கும் விதமாக அங்கியை கழற்றாமல் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...