சீரற்ற காலநிலையால் ஆழ்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்தது!

Date:

இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய நான்கு மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நவம்பர் 26ஆம் திகதி திருகோணமலையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் மோசமான வானிலை காரணமாக தென்கிழக்கு ஆழ்கடலில் கவிழ்ந்தது.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி விபத்தில் சிக்கிய மூன்று மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை கப்பல் “ரணரிசி” நடவடிக்கை எடுத்துள்ளதுடன், காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் நோக்கில் விசேட டைவிங் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கப்பலின் இயந்திர அறையில் சிக்கியிருந்த மீனவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போன மற்றைய மீனவரைக் கண்டுபிடிக்க கடற்படையினர் அந்த கடற்பகுதியில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...

‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால்...

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...