ஜனாதிபதி ரணிலின் சட்டத்தரணி வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தி : ஷாங்க்ரி-லா ஹோட்டலில் 1000 பேருக்கு பார்ட்டி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு, நாட்டின் சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்த விசேட கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றியதுடன், ஜனாதிபதியின் சட்டத்தரணி  ரொனால்ட் பெரேரா வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.

சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...