டிலான் சேனாநாயக்கவின் கத்திக்குத்துக்கான காரணம் தெரியவந்தது!

Date:

சமூக ஊடக செயற்பாட்டாளரான டிலான் சேனாநாயக்கவை கத்தியால் குத்தி காயப்படுத்திய நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (டிசம்பர் 26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தெமட்டகொட, கொம்பனி வீதிய மற்றும் பொரளை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 44 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபர்கள் தினமும் அங்கு செல்வது வழக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட யுவதி ஒருவர் டிலான் சேனாநாயக்கவினால் “கேலி” செய்யப்பட்டதையடுத்து பிரதான சந்தேகநபர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பின்னர், காயமடைந்த நபர் அவரது சட்டையை பிடித்து, “அச்சுறுத்தலுக்கு பழிவாங்கும் வகையில்” அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக சந்தேகநபர்களை மிரிஹான தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

டிசம்பர் 14ஆம் திகதி நுகேகொடை பகொட வீதியில் உள்ள டிலான் சேனாநாயக்கவின் வீட்டிற்கு முகமூடி அணிந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்து கத்தியால் குத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...