திருமண வைபவத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி: 50 பேர் படுகாயம்!

Date:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல் அமைச்சர் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...