தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுஎன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...