நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளை நாம் எடுக்கத்தான் வேண்டும்: ஜனாதிபதி

Date:

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மக்களை ஏமாற்றுவது ஏன் எனத் தெரியவில்லை.

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால் இந்தக் கதையைச் சொல்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அவரது செலவுகள் அதிகரிக்கும்.

மேலும் “பொது பயன்பாட்டு சட்டம் மற்றும் மின்சாரச் சட்டத்தின்படி மின் கட்டணத்தை திருத்தும் அதிகாரம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு உள்ளது. யாரும் மின் கட்டணத்தை அதிகரிக்க விரும்புவதில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.

மக்கள் விரும்பாத முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக, மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக, இலங்கை இன்று நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

மின்சார சபையைக் காப்பாற்ற, 400 பில்லியன் ரூபாவை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...