‘நேர்மைக்கு மகுடம்’: 2022/23 விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23க்கு பரிந்துரைத்து, நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய  அரச உத்தியோகத்தர்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்  எனில்,  உங்களுக்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த இறுதி 10 விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

எதிர்வரும் 2023 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் உங்களது விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள: www.integrityicon.lk அல்லது
தொடர்பு கொள்ளுங்கள் 0711 295 295/ 0763223442 / icon@tisrilanka.org.
இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 – நேர்மையின் மீது ஓர் ஒளி பிரகாசிக்கட்டும்! இத்தகவலை பிறருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...