பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனவுக்கு “சந்த தெக்கட சந்த” நூல் கையளிப்பு

Date:

பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சமன் புஷ்ப லியனகேயின் மொழிப்பெயர்ப்பில், சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய  ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற நூலின் பிரதிகள், இன்று பத்தர முல்லையில் உள்ள இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D .தர்மசேன மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் (முகாமைத்துவம்) அமித் ஜயசுந்தர ஆகியோருக்கு, பஹன மீடியா ஊடக அமைப்பின்  தலைவர்,செய்யத் சாலிம் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத அமைப்பின் இணைத் தலைவரும் கல்வி அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினருமான கலாநிதி அஸ்ஸையத், ஹசன் மௌலானா அல்காதிரி, பஹன மீடியா ஊடக அமைப்பின்  பணிப்பாளர் அஷ்.அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் பற்றி மிக அழகிய முறையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் சிங்கள மொழியிலான நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...