பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கான நாடளாவிய வேலைத்திட்டம்

Date:

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கிராமம், நகரம் என்ற பேதமின்றி ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘குழந்தைகள் 8 மணி நேரம் பாடசாலைகளில் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளனர். எனவே, இதற்கு பெற்றோரின் பொறுப்பு உள்ளது’ என்றார்.

இது கொழும்பில் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் இந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...