பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கான நாடளாவிய வேலைத்திட்டம்

Date:

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கிராமம், நகரம் என்ற பேதமின்றி ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘குழந்தைகள் 8 மணி நேரம் பாடசாலைகளில் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளனர். எனவே, இதற்கு பெற்றோரின் பொறுப்பு உள்ளது’ என்றார்.

இது கொழும்பில் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் இந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...