பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறவடைந்தது!

Date:

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தெரியவந்தது.

விசேட குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பர்னாந்துபுல்லே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரியவந்தது.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது, பெண் உரிமை தொடர்பில் ஓம்புட்ஸ்மன் ஒருவரை நியமித்தல் உள்ளிட்ட பொறிமுறையொன்றை நிறுவுதல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அந்த உரிமைகளை மீறும் போது ஆணைக்குழுவினால் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள், பாலின நிபுணர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் பெண் உரிமை அமைப்புகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய, இந்த சட்ட மூலம் தொடர்பான கருத்துக்களை பெற்றுக்கொள்ள மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பவற்றின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடுவதற்கும் பத்திரிகை விளம்பரம் வெளியிடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...