மக்களின் பிரச்சினைகளை பயங்கரவாதம் என்றால் இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருப்போம்: வசந்தவுக்கு ஜனவரி 17 வரை மறியல்

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் இந்த சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தை நீதிமன்றில் முன்வைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பணியகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகே நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை பேரூந்துக்குள் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“இந்த நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளை பயங்கரவாதம் என்று அழைத்தால், நாங்கள் தயார், இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் கேவலமான அரசாங்கங்களுக்கு முன்னால் மண்டியிடுவதில்லை’ என்று கூறினார்

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...