‘யார் அந்த முட்டாள்?’: தனது பதவி குறித்து எலான் மஸ்க் ட்வீட்

Date:

ட்விட்டர் தலைமை அதிகாரி பதவி இராஜினாமா தொடர்பாக எலான் மஸ்க் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை  அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த டிச.18 ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார்.

அதில், தான் ட்விட்டர் தலைமை அதிகாரி பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த கேள்விக்கு புளூடிக் ட்விட்டர் பயனர்கள் மட்டும் வாக்களிக்குமாறு
கூறினார்.

இந்த வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர், எலான் மஸ்க் ட்விட்டர்   பதவியில்
இருந்து விலக வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று (டிச.21) எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“ட்விட்டர் தலைமை அதிகாரி பதவியை வகிப்பதற்கு தகுதி வாய்ந்த முட்டாள்தனம் உள்ள ஒருவர் கிடைத்துவிட்டால், நான்  பதவியை இராஜினாமா செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...