யாழ்ப்பாணம் – சென்னை இடையே வாராந்தம் நான்கு விமான சேவைகள்: அடுத்த வாரம் முதல் ஆரம்பம்!

Date:

இந்தியாவின் Alliance Air 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வணிகரீதியான விமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயங்கும்.

Alliance Air இன் முதல் சர்வதேசப் பயணத்தைத் தவிர, இது 41 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்துள்ளது.

டெல்லி, கோயம்புத்தூர், அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, துபாய், திருவனந்தபுரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு விமானப் பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும் வகையில் சென்னை வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

Alliance Air இன் பல்வேறு விளம்பரச் சலுகைகளை www.allianceair.in எனும் இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...