ருமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது!

Date:

ருமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் இரண்டு  லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலிருந்து 16 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது மற்றுமொரு  லொறியில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...