அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!

Date:

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்ததையடுத்து தபால் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு நள்ளிரவு வரை தொடரும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனையில் தற்போதுள்ள மேலதிக நேர கொடுப்பனவு முறையை திருத்துதல், இடமாற்றம் மற்றும் முறையீடு சபையில் இருந்து தொழிற்சங்கங்களை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில்...

டிட்வா சூறாவளியால் 43,991 பேர் பாதிப்பு

டிட்வா  சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த...

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில் முத்து முஹம்மது...

நாட்டில் நிலவும் மோசமான வானிலை: ஜுமுஆத் தொழுகை தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண மற்றும் சவாலான சூழ்நிலையை முன்னிட்டு, அகில...