அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!

Date:

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்ததையடுத்து தபால் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு நள்ளிரவு வரை தொடரும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனையில் தற்போதுள்ள மேலதிக நேர கொடுப்பனவு முறையை திருத்துதல், இடமாற்றம் மற்றும் முறையீடு சபையில் இருந்து தொழிற்சங்கங்களை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...