இலங்கையில் இடம்பெறும் ATM திருட்டு: கோடிக்கணக்கான ரூபா கொள்ளை!

Date:

தென் மாகாணத்தின் மூன்று பிரதான நகரங்களில் அமைந்துள்ள மூன்று அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து கோடி கணக்கான ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள ATM இயந்திரங்களில் இருந்தே இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ATM இயந்திரங்களின் கணினி கட்டமைப்பை ஹேக் செய்து மென்பொருள் மாற்றப்பட்டு, ஒரு ATM இயந்திரத்தில் இருந்து நாற்பத்தாறு லட்சத்து எண்பதாயிரம் ரூபாவும், மற்றொரு இயந்திரத்தில் இருந்து இரண்டு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாவும், மற்றைய இயந்திரத்தில் இருந்து ஐம்பத்தேழு இலட்சம் ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று, ATM கூடங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களில் ஸ்டிக்கரை ஒட்டி, இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள...