இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கவே நாட்டைக் கையகப்படுத்தினேன்: ஜனாதிபதி

Date:

நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட 306 C-2 லியோ கழகத்திற்கு 6,500 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும்  லியோ தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இன்றைய தினத்தைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்காமல் 25 வருடங்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...