ஐஸ் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க கம்பஹா மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு குழுக்கள்!

Date:

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கண்காணிப்புக் குழுக்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுக்கள் ஸ்தாபிக்கப்படாத பாடசாலைகளில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குழுக்களை அமைக்குமாறு கம்பஹா கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், கம்பஹா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு அமைச்சர் கம்பஹா பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் கம்பஹா பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு மேற்பார்வைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதா என  வினவப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்பஹா கோட்டக் கல்விப் பணிப்பாளர், கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது ஒரு மோசடியாகவே செயற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த மோசடியை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...