‘ஒரு முட்டையை 25 ரூபாவிற்கு வழங்க முடியும்’

Date:

ஒரு முட்டையை 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன  தெரிவித்துள்ளார்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து அந்த முறையில் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், பெரிய அளவிலான முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையாக முட்டை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

மூலப்பொருட்கள் உள்ளிட்ட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் குழு முட்டை உற்பத்தியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கேக் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான அளவு முட்டைகள் சந்தையில் கிடைப்பதில்லை என்றும், தற்போது முட்டைகள்  50 சதவீதம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முட்டைகள் இல்லாததால், பேக்கரி உரிமையிளர்கள் கேக் உள்ளிட்ட  பேக்கரி பொருட்களை நிறுத்தியுள்ளனர்

முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையை குறைக்க முட்டையை இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...