கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தோனேசியா!

Date:

இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவிலும் புதிய வகை தொற்றுகள் தென்பட தொடங்கியதால் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சூழலில், இந்தோனேசியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

அங்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி, கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தன.

இதனால் பாதிப்புகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக  ஜனாதிபதி விடோடோ அறிவித்தார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நேற்றுடன் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

அங்கு இதுவரை 67 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானதில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 583 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...