சுற்றுலாப் பயணிகளின் வருகை டொலர் வருமானத்தை அதிகரிக்கிறது!

Date:

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கைகளின்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் 59759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 வீத அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 628017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில், சுற்றுலாப் பயணிகளின் சராசரி தினசரி வருகை 1991 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் இலங்கைக்கு கிடைத்த வருமானம் 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...