ஜனாதிபதி ரணிலின் சட்டத்தரணி வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தி : ஷாங்க்ரி-லா ஹோட்டலில் 1000 பேருக்கு பார்ட்டி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு, நாட்டின் சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்த விசேட கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றியதுடன், ஜனாதிபதியின் சட்டத்தரணி  ரொனால்ட் பெரேரா வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.

சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...