ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு, நாட்டின் சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்த விசேட கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றியதுடன், ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.
சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.