ஜனாதிபதி ரணிலின் சட்டத்தரணி வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தி : ஷாங்க்ரி-லா ஹோட்டலில் 1000 பேருக்கு பார்ட்டி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு, நாட்டின் சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்த விசேட கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றியதுடன், ஜனாதிபதியின் சட்டத்தரணி  ரொனால்ட் பெரேரா வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.

சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...