‘டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது’

Date:

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், அதன்படி டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.

இருப்பினும், மற்ற எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்படவில்லை. டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைப்பது போதாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்   தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதன் புதிய விலை 4,610 ரூபாய். அத்துடன், 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,850 ரூபாவாகும்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...