தந்தையின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஹரி – மேகனுக்கு எதிர்ப்பு?

Date:

அடுத்த ஆண்டு மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று  பிரிட்டிஷ் அரசியல்வாதிகள், மூத்த இராணுவத் தலைவர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோரை கேட்டுக் கொண்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பற்றிய ஆய்வில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோரின் அரச பட்டங்கள் பறிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதி பேர் நம்புகின்றனர்.

பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் ஹரி நீடிக்கிறார்.அவரை வாரிசாக கருதக்கூடாது என  42 சதவீதம் பேர் நம்புவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கல் ஆகியோர் முடிசூட்டு விழாவில் பங்கேற்றால், பிரித்தானிய மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரலாம் என பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நெட்ஃபிக்ஸ் இணையச் சேவையில் சமீபத்தில் தொடங்கிய இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலின் ஆவணப்பட  அவர்களின் கடும் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி  உண்மைகளை அம்பலப்படுத்தும் அந்த ஆவணப்படத்தை  வெளியிட்டனர்.

பிரித்தானிய மக்கள், ராஜகுடும்பத்து விசுவாசிகள் எனப் பலரும் அந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தற்போது அந்தப் படம் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...

‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால்...

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...