தந்தையின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஹரி – மேகனுக்கு எதிர்ப்பு?

Date:

அடுத்த ஆண்டு மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று  பிரிட்டிஷ் அரசியல்வாதிகள், மூத்த இராணுவத் தலைவர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோரை கேட்டுக் கொண்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பற்றிய ஆய்வில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோரின் அரச பட்டங்கள் பறிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதி பேர் நம்புகின்றனர்.

பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் ஹரி நீடிக்கிறார்.அவரை வாரிசாக கருதக்கூடாது என  42 சதவீதம் பேர் நம்புவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கல் ஆகியோர் முடிசூட்டு விழாவில் பங்கேற்றால், பிரித்தானிய மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரலாம் என பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நெட்ஃபிக்ஸ் இணையச் சேவையில் சமீபத்தில் தொடங்கிய இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலின் ஆவணப்பட  அவர்களின் கடும் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி  உண்மைகளை அம்பலப்படுத்தும் அந்த ஆவணப்படத்தை  வெளியிட்டனர்.

பிரித்தானிய மக்கள், ராஜகுடும்பத்து விசுவாசிகள் எனப் பலரும் அந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தற்போது அந்தப் படம் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...