திருமண வைபவத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி: 50 பேர் படுகாயம்!

Date:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல் அமைச்சர் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...