‘நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது’

Date:

யுத்தத்தின் பின்னர் பொருளாதாரம் மாற்றமடையாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை டொயோட்டா லங்கா நிறுவனத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டுக்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக விக்ரமசிங்க தெரிவித்தார்.

வியட்நாமின் பொருளாதாரம் இன்று ‘ஃபார்முலா ஒன் பந்தய கார் போன்றது’. நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது. பிறகு எப்படி சிங்கப்பூருக்குப் போய் ஓட்டப்போட்டிக்கு  போக முடியும்?

மற்ற நாடுகளில் ஃபார்முலா ஒன் பந்தய கார்கள் உள்ளன. முச்சக்கர வண்டியில் சென்று வெற்றிபெற முடியாது. எனவே, நாம் ஒரு பந்தய கார் கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்டை திறந்த பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம் அந்த காரை உருவாக்குகிறோம்.

உலகத்துடன் போட்டியிட போட்டிமிக்க  பந்தய காரை நாங்கள் உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...