‘நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது’

Date:

யுத்தத்தின் பின்னர் பொருளாதாரம் மாற்றமடையாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை டொயோட்டா லங்கா நிறுவனத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டுக்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக விக்ரமசிங்க தெரிவித்தார்.

வியட்நாமின் பொருளாதாரம் இன்று ‘ஃபார்முலா ஒன் பந்தய கார் போன்றது’. நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது. பிறகு எப்படி சிங்கப்பூருக்குப் போய் ஓட்டப்போட்டிக்கு  போக முடியும்?

மற்ற நாடுகளில் ஃபார்முலா ஒன் பந்தய கார்கள் உள்ளன. முச்சக்கர வண்டியில் சென்று வெற்றிபெற முடியாது. எனவே, நாம் ஒரு பந்தய கார் கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்டை திறந்த பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம் அந்த காரை உருவாக்குகிறோம்.

உலகத்துடன் போட்டியிட போட்டிமிக்க  பந்தய காரை நாங்கள் உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...