நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்!

Date:

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற விடுமுறைக் காலம் நீடிக்கப்படுவதை கருத்திற்கொண்டு, 5 ஆம் திகதியே நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள வளாகங்களை மீள பெறுவதற்கான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...