நானுஓயா தோட்ட வரலாற்றில் முதல் பட்டதாரி!

Date:

நானுஓயா கிளாசோ தோட்ட வரலாற்றில் முதல் பட்டதாரியாக புண்ணிய செல்வன் என்ற மாணவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

இதனால் நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தோட்ட இளைஞர் பட்டம் பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் ஆண் பிள்ளைகள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளிகளாகவும், பெண் பிள்ளைகள் தேயிலை பறிப்பவர்களாகவும் அல்லது  தரமற்ற வேலைகளை  செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளியின் பிள்ளையொன்று பல்கலைக்கழக ஆணை பெற்று பட்டப்படிப்பை நிறைவு செய்தமை அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அனைவருக்கும் கல்வி பெறும் உரிமைக்காக, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி கையில் பெல்ட் அணிந்து விளையாடிய காட்சியை நாம் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம்

அதில் ““Education for all”(அனைவருக்கும் கல்வி) என்று கூறப்பட்டிருந்தது.

1 COMMENT

  1. தரமற்ற வேலைகளை செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
    athu enna tharamattra velai goyyala

Comments are closed.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...